sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு

/

ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு

ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு

ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு


ADDED : மார் 22, 2024 01:10 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும், தற்காலிக சந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசுத்துறைகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், ரோட்டோரங்களில் நடத்தப்படும் இத்கைய வாரச்சந்தைகளால், நுகர்வோருக்கு பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது. உதாரணமாக, குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரத்தில், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது.

ரோட்டோரத்தில், 15க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, காய்கறி உட்பட அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். சந்தைக்கு வரும் வாகனங்கள் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் அப்பகுதியில், சந்தை நாளன்று, நெரிசல் அதிகரித்து விபத்தும் ஏற்பட்டது.

இவ்வாறு, பாதுகாப்பு இல்லாமல், முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படும் சந்தைகள் குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us