/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளி சாக்கடை கால்வாயாக மாறிய பஸ் ஸ்டாண்ட்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு
/
திறந்தவெளி சாக்கடை கால்வாயாக மாறிய பஸ் ஸ்டாண்ட்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு
திறந்தவெளி சாக்கடை கால்வாயாக மாறிய பஸ் ஸ்டாண்ட்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு
திறந்தவெளி சாக்கடை கால்வாயாக மாறிய பஸ் ஸ்டாண்ட்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு
ADDED : மே 03, 2024 11:13 PM
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில், திறந்த வெளியில் கழிவுகள் வெளியேற்றப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பயணியர் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும், பிரதான வழித்தடங்களை ஆக்கிரமித்து, வணிக வளாகத்திலுள்ள கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் வரும் வழியிலேயே பொதுமக்கள் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், உணவகங்கள், ஓட்டல்களிலிருந்து, இலை மற்றும் உணவு கழிவுகள் நேரடியாக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் போடப்படுகிறது.
ஓட்டல் மற்றும் டீக்கடைகளிலிருந்து, உணவு கழிவுகள் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுகிறது.
திறந்த வெளி சாக்கடைக்கால்வாயாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டுள்ளதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. சாக்கடை கழிவு நீரில் பயணியர் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
அதே போல், பயணியர் அமர இருக்கை வசதியில்லாமல் கால்கடுக்க காத்திருக்கும் நிலையும், கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு, துர்நாற்றம் நிரந்தரமாக உள்ளது.
பயணிகள் வசதிக்காக, கழிப்பிட வசதிகள் இல்லாதததோடு, இருக்கும் ஒரு கழிப்பிடமும் பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் காணப்படுவதால், திறந்த வெளி கழிப்பிடங்கள் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் கழிப்பிட வசதியில்லாமல் பாதித்து வருகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு கருவி இருந்தும், பராமரிப்பின்றி வீணாக உள்ளது. எனவே, உடுமலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை மேற்படுத்த, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.