sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு

/

கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு

கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு

கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு


ADDED : பிப் 26, 2025 11:55 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது; காலையில், பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து பூவோடு எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தங்கக்கவச அலங்காரத்தில், அருள்பாலித்த மாரியம்மனை, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். காலை துவங்கி, மாலை வரை, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

வேண்டுதல் நிறைவேறியதால், பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள கருப்பராயசாமிக்கு கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூவோடு ஊர்வலத்தை தொடர்ந்து, நேற்று மாலை, கம்பம் எடுக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் உற்சவமும், நாளை அன்னதானமும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us