sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

/

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா


ADDED : மார் 06, 2025 06:26 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அருகே பனப்பாளையத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா விமரிசையாக நடந்தது.

கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த, 24ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 2ம் தேதி கிராமசாந்தியும், மறுநாள் இரவு, 8.00 மணிக்கு, அம்மன் அழைப்பு மற்றும் கம்பம் அமைத்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, பூவோடு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

விழாவில், நேற்று காலை, 9.00 மணிக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்த பெண்கள், அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று, மஞ்சள் நீராடுதல், அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகளுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us