/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் வேலை முகாம்; 48 பேருக்கு பணி வாய்ப்பு
/
தனியார் வேலை முகாம்; 48 பேருக்கு பணி வாய்ப்பு
ADDED : பிப் 22, 2025 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். 28 நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில், 56 ஆண்கள், 51 பெண்கள் என, மொத்தம் 107 பேர் பங்கேற்றனர். இவர்களில், 26 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம், 48 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

