/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 06, 2025 06:29 AM
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (7 ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றன. தேர்வு செய்யப்படுவோருக்கு, உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த வேலை தேடுவோர் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், https://www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.