/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : மே 09, 2024 04:44 AM
உடுமலை : மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்கு வசதியில்லாததால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை அருகே மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது. இங்கு உள்ள அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இதனால், வாகன போக்குவரத்து, பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இருக்கும். ஆனால், இப்பாலத்தில் மின்விளக்கு, பிரதிபலிப்பான் வசதிகள் அமைக்கப்படவில்லை. இரவில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, இப்பாலத்தில் மின்விளக்கு வசதி, பிரதிபலிப்பானை அமைக்க பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.