ADDED : ஆக 19, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், குமரானந்தபுரம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. முன்னாள் கவுன்சிலர் ருக்மணி தேர்தல் பார்வையாளராக பணியாற்றினார். இதில் 24 உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.
கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, உறுப்பினர் ஞானவேல் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.பள்ளியில் தற்போது 90 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி குறித்து புதிய குழு நிர்வாகிகள் ஆய்வு நடத்தினர்.

