/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
/
சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
ADDED : மார் 21, 2024 11:23 AM

திருப்பூர்:லோக்சபா தேர்தல் வேட்பு மனுவுக்கு, திருப்பூர் சப் - கலெக்டர் அலுவலகம் தயார் நிலையில் இருந்தும், வேட்பாளர்கள் யாரும் வராத நிலையில், வெறிச்சோடி இருந்தது.
லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சப் - கலெக்டர் அலுவலக பிரதான 'கேட்' மூடப்பட்டு, மக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. புகார் அளிக்க வருபவர்களுக்கென, முகப்பில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சப் - கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அலுவலகத்திற்குள் வருபவர்கள் விசாரிக்கப்பட்ட பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர்.
'வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தான் மனுதாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டுவர். இருப்பினும், சப்-கலெக்டர் அலுவலகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது' என, அலுவலர்கள்சிலர் கூறினர்.

