sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்தக் காலத்தில் ஓவியங்களாக அந்தக் கால மருத்துவ முறைகள்

/

இந்தக் காலத்தில் ஓவியங்களாக அந்தக் கால மருத்துவ முறைகள்

இந்தக் காலத்தில் ஓவியங்களாக அந்தக் கால மருத்துவ முறைகள்

இந்தக் காலத்தில் ஓவியங்களாக அந்தக் கால மருத்துவ முறைகள்


ADDED : ஆக 18, 2024 12:41 AM

Google News

ADDED : ஆக 18, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, கடந்த, 2022 ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர, ஆங்காங்கே மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களுடன் வளாகத்தில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன.

நைட்ரஸ் ஆக்சைடு செயல்பாடு, 1800களில் துவங்கியது; ரத்தத்தை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறும் திட்டம், 1818களில் வந்தது; அறுவை சிகிச்சைக்கு ஒருவரை தயார்படுத்த மருந்துகள் மூலம் ஒருவரை மயக்கமுற செய்யும் வழிமுறை, 1846களிலேயே இருந்துள்ளது ஆகியவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிட்டுள்ளனர்.

'ஸ்டெதாஸ்கோப்' கண்டுபிடிக்கும் முன், நெஞ்சில் காது வைத்து நோய்வாய்ப்பட்டவர் உயிருடன் இருந்துள்ளாரா, துடிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் முறை இருந்துள்ளது. அத்துடன், ஒரு கூம்புவடிவ குழாயை நெஞ்சில் அழுத்தி பிடித்தும், சுவாசத்தை அறிந்து கொண்டனர்.

இம்முறை, 1816களிலே இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கண் மருத்துவம், பூதக்கண்ணாடி எனப்படும் லென்ஸ் உதவியுடன் கண் சார்ந்த மருத்துவம், 1841ல் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரங்கம் முழு தும், ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us