/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை ;பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
/
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை ;பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை ;பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை ;பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 10, 2024 12:18 AM

உடுமலை;நான்கு ரோடு சந்திப்பிலுள்ள, உயர் மின் கோபுர விளக்கை, மாற்றியமைத்து, நெரிசலை குறைக்க ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும் என்ற பெதப்பம்பட்டி மக்களின் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில் உள்ளது.
இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில், குறிப்பிட்ட துாரத்துக்கு, சென்டர் மீடியனும் வைக்கப்பட்டது.
ஆனால், உடுமலை ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக, உடுமலை ரோட்டில் குறுகலான இடத்தில், உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
இதனால், உடுமலை நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை.
எனவே, சந்திப்பின் மையப்பகுதிக்கு, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்றி ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெரிசலை குறைக்க, உயர் மின் கோபுர விளக்கை மாற்றியமைக்க வேண்டும். சந்திப்பின் மையப்பகுதிக்கு, கோபுரத்தை இடம் மாற்றுவதால், அப்பகுதி ரவுண்டானா போல, மாறி விடும். தாராபுரம் மற்றும் உடுமலை ரோட்டுக்கு செல்லும், வாகனங்கள் எளிதாக விலகி செல்ல முடியும். இது குறித்து நீண்ட காலமாக மனு கொடுத்தும், ஒன்றிய நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

