sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு அறிவிப்பு உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு அறிவிப்பு உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு அறிவிப்பு உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு அறிவிப்பு உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு


ADDED : ஜூன் 24, 2024 10:46 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, '2 ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2, '2 ஏ' ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளுது. குரூப் - 2 பதவிக்கு, 507 காலிப்பணியிடங்களும், குரூப் - '2 ஏ' பதவிக்கு, 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம், 2,327 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான கல்விதகுதியாக, ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூலை, 19 விண்ணப்பிக்க கடைசி நாளாகவும், முதல் நிலைத்தேர்வு, செப்., 14ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு வாயிலாக, தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான, இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கூடுதல் பயிற்சி மையத்தில், வரும், ஜூலை, 1ம் தேதி முதல் நடக்கிறது.

இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421- -2999152, 94990 55944 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சியில், மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம், என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us