sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முழு நேர நுாலகமாக தரம் உயர்த்துங்க! மக்கள் எதிர்பார்ப்பு

/

முழு நேர நுாலகமாக தரம் உயர்த்துங்க! மக்கள் எதிர்பார்ப்பு

முழு நேர நுாலகமாக தரம் உயர்த்துங்க! மக்கள் எதிர்பார்ப்பு

முழு நேர நுாலகமாக தரம் உயர்த்துங்க! மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 14, 2025 10:53 PM

Google News

ADDED : மார் 14, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பெதப்பம்பட்டி கிளை நுாலகத்தை, முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கடந்த 1967ல், கிளை நுாலகம் துவங்கப்பட்டது.தற்போது, மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், காலை, 9:00 மணி முதல் 12:30 மணி, மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை செயல்படும் நுாலகமாக உள்ளது.

குடிமங்கலம் ஒன்றிய மேற்குப்பகுதியில், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், வேலுார் ராமச்சந்திராபுரம் என அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

இப்பகுதியிலுள்ள 25க்கும் அதிகமான கிராமங்களில், படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஒரே ஒரு கிளை நுாலகமாக பெதப்பம்பட்டி கிளை நுாலகம் மட்டுமே உள்ளது.

இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழிற்கல்வி மற்றும் கலைக்கல்வி படிக்கும் மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகவும், இதர தேவைகளுக்கும் நுாலக வசதி இல்லாமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உதாரணமாக, வீதம்பட்டி, வேலுார், வாகத்தொழுவு உட்பட கிராமங்களை சேர்ந்தவர்கள் நுாலகத்திற்காக 15 கி.மீ., வரை பயணிக்க வேண்டும்.

மூங்கில்தொழுவு, சிக்கனுாத்து, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி உட்பட கிராம மக்களுக்கு இதே நிலை தான் காணப்படுகிறது.

பெதப்பம்பட்டி கிளை நுாலகத்தை, காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில், பூளவாடி, பெதப்பம்பட்டி ஆகிய இரண்டு கிளை நுாலகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஊர்ப்புற நுாலகங்கள் ஒன்று கூட இப்பகுதியில் இல்லை. இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், 20 கி.மீ., துாரம் பயணித்து, உடுமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பெதப்பம்பட்டி நுாலகத்தை, உடனடியாக தரம் உயர்த்த வேண்டும். ஊர்ப்புற நுாலகங்களை புதிதாக துவக்கவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us