sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி

/

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி


ADDED : செப் 29, 2025 01:06 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இறந்தனர்.

கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 33; செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த கோகுலபிரியா, 29 ஆகியோர் அடங்குவர்.

கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்,நேற்று காலை வெள்ளகோவிலுக்கு, இருவரது சடலமும் கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் சாமிநாதன் தலைமையில் தி.மு.க.,வினர், இரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

போலீசார் கூறியதாவது:

இறந்த கோகுலபிரியா, தனது கணவர் ஜெயபிரகாஷ், மகள் கவுசிகா, 4 ஆகியோருடன் கூட்டத்துக்கு சென்றுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், குழந்தையை அழைத்து கொண்டு கணவர் வெளியேறினார். கோகுலபிரியா விஜயை அருகில் பார்த்து விட்டு வருவதாக சென்ற போது, நெரிசலில் சிக்கி இறந்தது தெரிந்தது.

இறந்த மணிகண்டன் த.வெ.க உறுப்பினராக உள்ளார். நண்பர்களுடன் கூட்டத்துக்கு சென்றது தெரியவந்தது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us