/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் உரிமைத்தொகை கோரி 26,675 விண்ணப்பங்கள்; அரசு திட்ட முகாமில் குவிந்தன
/
மகளிர் உரிமைத்தொகை கோரி 26,675 விண்ணப்பங்கள்; அரசு திட்ட முகாமில் குவிந்தன
மகளிர் உரிமைத்தொகை கோரி 26,675 விண்ணப்பங்கள்; அரசு திட்ட முகாமில் குவிந்தன
மகளிர் உரிமைத்தொகை கோரி 26,675 விண்ணப்பங்கள்; அரசு திட்ட முகாமில் குவிந்தன
ADDED : ஆக 04, 2025 07:40 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை 30ம் தேதி வரை நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மகளிர் உரிமைத்தொகைகோரி, 26, 675 விண்ணப்பங்கள் குவிந்தன.
'உங்களுடன் ஸ்டாலின்'முகாம்களில், பொதுமக்களிடமிருந்து, 15 அரசு துறை சார்ந்த, 46 வகை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. முகாம்களில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக மொத்தம், 325 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 120 முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 15 முதல் 30ம் தேதி வரை, மொத்தம் 53 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
முகாம்களில், பொதுமக்களிடமிருந்து மொத்தம், 56 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில் நடத்தப்பட்ட முகாம்களில், 8,595; திருப்பூர் தெற்கு தாலுகா பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில், 7,545 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
தாராபுரத்தில், 7,527; அவிநாசியில், 7,120; உடுமலையில், 6,672; காங்கயத்தில் 6364; பல்லடத்தில்,5,252; ஊத்துக்குளியில் 4,437; மடத்துக்குளத்தில், 2679 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நடத்தப்பட்டுவரும் முகாம்களில், மற்ற விண்ணப்பங்களைவிட, மகளிர் உரிமைத்தொகைகோரும் விண்ணப்பங்களே அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.
பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்களில், 47.47 சதவீதம் அதாவது 26 ஆயிரத்து 675 விண்ணப்பங்கள், மகளிர் உரிமைத்தொகைக்கானவையே.
தீர்வு முக்கியம் ஏற்கனவே அந்தந்த அரசு துறை அலுவலகங்கள் வாயிலாக, செயல்படுத்தப்பட்டுவரும் சேவைகளே, ஒருங்கிணைக்கப்பட்டு, முகாமில்ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது.
முகாம்களில், பொதுமக்களிடமிருந்து எண்ணிக்கை அளவில் அதிக விண்ணப்பங்களை பெறுவது சாதனையாகாது. மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை நீங்கலாக, 29 ஆயிரத்து 516 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; இவற்றில், 2,499 விண்ணப்பங்கள் மீதே தீர்வு காணப்பட்டுள்ளது.
துறை சார்ந்த அரசு அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு, விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே முகாமின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.