sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கருணாம்பதி கிராமத்தில் 271 மலைவேம்பு நடவு 

/

கருணாம்பதி கிராமத்தில் 271 மலைவேம்பு நடவு 

கருணாம்பதி கிராமத்தில் 271 மலைவேம்பு நடவு 

கருணாம்பதி கிராமத்தில் 271 மலைவேம்பு நடவு 


ADDED : நவ 08, 2025 12:58 AM

Google News

ADDED : நவ 08, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பெருமாநல்லுார் அடுத்துள்ள கருணாம்பதி பகுதியில், நேற்று 271 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், மாவட்டம் முழுவதும், மரக்கன்று நட்டு வளர்க்கும் பணி வேகமெடுத்துள்ளது.

உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம், அவிநாசி, பல்லடம், திருப்பூர்சுற்றுப்பகுதிகளில், விவசாய நிலங்களில், அதிக அளவு மரக்கன்று நட்டு வளர்க்க முன்பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் இதுவரை, 2.35 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; இந்நிலையில், பெருமாநல்லுார் அருகே மரக்கன்று நடப்பட்டது.

பெருமாநல்லுார் அடுத்துள்ள கருணாம்பதி பகுதியில், சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான, கூட்டக்கருக்கு தோட்டத்தில், 271 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இத்திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us