/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடுவம்பாளையத்தில் 375 மரக்கன்று நடவு
/
இடுவம்பாளையத்தில் 375 மரக்கன்று நடவு
ADDED : நவ 16, 2025 12:39 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், வெள்ளகோவில், மூலனுார், காங்கயம், உடுமலை பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர் இடுவம்பாளையம் அடுத்த வஞ்சிபாளையத்தில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
கரியகாளியம்மன் கோவில் அறக்கட்டளையின் செயலாளர் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான, குட்டைகாடு தோட்டத்தில் மரக்கன்று நடப்பட்டது. அசோகமரம் -200, வாகை -30 , நீர் மருது -35, பாதாம் -60, கடம்பு -50 என, 375 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

