/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'
/
ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 16, 2025 12:32 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை, 2,204 பேர் எழுதினர்; 416 பேர் தேர்வுக்கு வரவில்லை.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. அவ்வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் - 1 ஆசிரியர் தகுதித்தேர்வு, மாவட்டத்தில், ஏழு மையங்களில் காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது.தேர்வுக்கு விண்ணப்பித்த, 2,620 பேரில், 416 பேர் தேர்வுக்கு வரவில்லை; 2,204 பேர் தேர்வெழுதினர். இன்று, பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள் - 2 ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. 23 மையங்களில் தேர்வெழுத, 6,890 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

