/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கபடி போட்டி: 47 அணிகள் ஆர்வம்
/
மாவட்ட கபடி போட்டி: 47 அணிகள் ஆர்வம்
ADDED : நவ 03, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 51வது ஜூனியர் சிறுவர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் நேற்று நடந்தது.
மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்றார். கவுரவதலைவர் நாச்சிமுத்து, சேர் மன் கொங்கு முருகேசன், தலைவர் ரோலக்ஸ் மனோகரன், பொருளாளர் ஆறுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுதும் இருந்து, 47 அணிகளை சேர்ந்த, 600 பேர் ஆர்வமுடன் கபடி போட்டியில் பங்கேற்றனர். லீக், காலிறுதி போட்டிகள் நேற்று மாலை வரை நடந்தது.

