/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு
/
தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு
ADDED : ஜூலை 07, 2025 12:32 AM
திருப்பூர்; ஆக., 18 முதல் 22 வரை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும், 10 முதல் 17 ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில்விண்ணப்பிக்கலாம்.
முதன்முறை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைய வழி விண்ணப்பத்தின் போது சமர்பிக்க வேண்டும்.
ஏற்கனவே தேர்வெழுதியவர்கள் தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் போது, முந்தைய மதிப்பெண் சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். தேர்வு கட்டணம், 125 ரூபாய்; இணைய வழி பதிவு கட்டணம், 70 ரூபாய். மேலும் விபரங்களுக்கு www.dge.tn.gov.in இணையதளத்தை பார்க்கவும்.