sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

/

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை


ADDED : செப் 17, 2025 08:50 PM

Google News

ADDED : செப் 17, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கல்லாபுரத்தில், உலர்களம் இல்லாததால், அறுவடை சீசனில் நெல் காய வைக்க, அப்பகுதி விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில், அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக, நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. இரு போகங்களில் நெல் சாகுபடியாகிறது.

அறுவடை சீசனில்,நெல்லை உலர வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அப்பகுதியில், போதிய உலர்கள வசதியில்லை.

விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு, பாலங்களில், நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். கல்லாபுரத்தில், நெல்லை காய வைக்க உலர்களம் அமைத்துதர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை அப்பகுதி விவசாயிகள் விடுத்து வருகின்றனர். வேளாண்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us