ADDED : ஏப் 05, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வின், ஜெயலலிதா பேரவை சார்பில், நகரப்பகுதிகளில், வாரந்தோறும்திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள், தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு ஆகியவை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மங்கலம் ரோடு, கருவம்பாளையம் தாடிக்காரமுக்கு பகுதியில், திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் செய்தனர்.