sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'அ'னா… 'ஆ'வன்னா… அரிச்சுவடி ஆரம்பம்! 'தினமலர்' சார்பில், அக்., 2ல் வித்யாரம்பம்

/

'அ'னா… 'ஆ'வன்னா… அரிச்சுவடி ஆரம்பம்! 'தினமலர்' சார்பில், அக்., 2ல் வித்யாரம்பம்

'அ'னா… 'ஆ'வன்னா… அரிச்சுவடி ஆரம்பம்! 'தினமலர்' சார்பில், அக்., 2ல் வித்யாரம்பம்

'அ'னா… 'ஆ'வன்னா… அரிச்சுவடி ஆரம்பம்! 'தினமலர்' சார்பில், அக்., 2ல் வித்யாரம்பம்


ADDED : செப் 25, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் மற்றும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கான, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, ராக்கியா பாளையம் ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், அக்., 2ம் தேதி நடக்க உள்ளது.

நவராத்திரி விழாவின் நிறைவாக, வெற்றித்திருவிழாவாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளில், குழந்தைகள் கற்றலை துவக்குகின்றனர். தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி, குழந்தைகள் கரம் பற்றி, 'அ' என்று எழுதி, கற்றலை துவக்கி வைக்கின்றனர். இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கு, கற்றலை துவக்குதலை, 'தினமலர்' நாளிதழ் இந்தாண்டும் நடத்தப்போகிறது.

இந்நிகழ்ச்சி அக்., 2 ம் தேதி காலை, 8:00 மணி முதல், 10:30 மணி வரை, அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற உள்ளது. இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுடன் வந்து, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளின் அனுக்கிரகத்துடன் வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.

அனுமதி இலவசம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம். சுற்றுப்பகுதிகளில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை அழைத்து வர, அவிநாசி, அன்னுார், அணைப்புதுார், காந்திநகர், சோமனுார், தெக்கலுார் ஆகிய பகுதிகளில் இருந்து, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலுக்கு வந்துசெல்ல வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, வித்யாரம்பம் வாயிலாக கல்விப்பயணத்தை துவக்க உள்ள குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்து பயில, விஜயதசமி மாணவர் சேர்க்கையில், 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கவும், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்வந்துள்ளது.

குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை, 96887 53040 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us