sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம் 

/

தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம் 

தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம் 

தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம் 


ADDED : பிப் 14, 2025 03:44 AM

Google News

ADDED : பிப் 14, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளை தேர்வுத்துறை இயக்குனரகம் முடுக்கி விட்டுள்ளது. மாவட்ட அளவில், தேர்வுகளை திறம்பட, எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்த, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை இயக்குனர் நிலையிலான அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரியாக தேர்வுத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் திருப்பூர் வர உள்ள இவர், பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள், மேற்கொள்ளப்பட்டுள்ள பணி குறித்து, முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்க உள்ளார்.

கடந்த 2023 - 2024ம் கல்வியாண்டிலும், திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தும் கண்காணிப்பு அலுவலராக, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us