/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது
/
கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது
ADDED : டிச 29, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட் பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சந்தேகப்படும் வகையில் வாலிபர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தனர். அவர் பீஹாரை சேர்ந்த விகாஸ்குமார், 21; 11 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரிந்தது.
பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி வந்து, திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

