sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46 கோடியில் கட்டடம்

/

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46 கோடியில் கட்டடம்

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46 கோடியில் கட்டடம்

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46 கோடியில் கட்டடம்


ADDED : ஜன 23, 2025 07:38 AM

Google News

ADDED : ஜன 23, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; திருப்பூர் மாநகராட்சிக்கு, 46.80 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலக கட்டடம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி, 159.35 ச.கி.மீட்டராகும். 13.99 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள மாநகராட்சியில், கணியாம்பூண்டி, நாச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

எனவே, நிர்வாக தேவைகளை நிறைவு செய்யவும், மக்களுக்கான சேவையை மேம்படுத்தவும், பேசதிய வசதிகளுடன் கூடிய, புதிய அலுவலக கட்டடம் திருப்பூர் மாநகராட்சிக்கு கட்டப்பட உள்ளது.

அம்மாநகராட்சிக்கு சொந்தமான, 3.32 ஏக்கர் பரப்பளவில் உள்ள கட்டடத்தில், அங்குள்ள மருத்துவ துறை சார்ந்த கட்டடத்தை அகற்றி, புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடைபெற உள்ளது.

இதற்காக, 46.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம், 96,432 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், இரண்டு தளங்களுடன் அலுவலக பகுதி, உயர் அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்துாக்கிகள், சாய்வுதளங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us