/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?
ADDED : செப் 19, 2025 08:14 PM
உடுமலை; உடுமலை அருகே தேவனுாரில்புதுாரில், பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார். இக்கிராமம், பொள்ளாச்சி, உடுமலை தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்தும், பொள்ளாச்சியிலிருந்து டவுன்பஸ்கள் இந்த ஊருக்கு வருகின்றன.
ஆனால், அங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், பஸ்கள் நிறுத்த இடமில்லாமல் நெருக்கடி ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினரும், உடுமலை ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.