sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை சிறப்பு முகாம்

/

குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை சிறப்பு முகாம்

குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை சிறப்பு முகாம்

குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை சிறப்பு முகாம்


ADDED : ஜன 09, 2025 11:21 PM

Google News

ADDED : ஜன 09, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- - நமது நிருபர் -

குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம், வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில், குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலக தரைதளத்திலுள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி முகாமை துவக்கிவைத்தார்.

சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் தங்கள் பெற்றோருடன் வந்து, உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பம் அளித்து வருகின்றனர். முதல்நாள் முகாமில், 55 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

''குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். வரும், 13ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன், முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்கலம்,'' என, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி கூறினார்.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி திட்டத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us