sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்

/

அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்

அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்

அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்


ADDED : ஜூன் 06, 2025 06:24 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், துாய்மை இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. துாய்மை இயக்கத்தை துவக்கிவைத்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:

தமிழக அரசு, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் என்கிற அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலம், முதல்கட்டமாக, சுற்றுச்சூழல் தினத்தில் தமிழகம் முழுவதும், 1,077 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில், அலுவலக கழிவுகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவுகள், உலோக கழிவு, காகிதம், கண்ணாடி கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளது.

கழிவுகளை நிலப்பரப்பில் குவித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும்வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சேகரிக்கப்படும் கழிவுகளை, உயர் தொழில்நுட்பங்கள் மூலம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலர்கள் ஒவ்வொருவரும், இந்த துவக்க நிகழ்ச்சி முடிந்ததும், தங்கள் அலுவலகங்களில் உள்ள கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துங்கள்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us