sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்

/

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்


ADDED : செப் 23, 2025 08:46 PM

Google News

ADDED : செப் 23, 2025 08:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,;மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 74.50க்கும், கொப்பரை ரூ. 228.60 க்கும் விற்பனையானது.

மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு, 4,804 கிலோ எடையுள்ள, 9,207 தேங்காய்களை, 28 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 10 வியாபாரிகள் பங்கேற்றனர்.

இதில், அதிபட்ச விலையாக ஒரு கிலோ தேங்காய், ரூ. 74.50 க்கும் குறைந்த பட்ச விலையாக, ரூ.63.50 என சராசரியாக, ரூ.68க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 3 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ரூபாயாகும்.

அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 29 விவசாயிகள், 29 மூட்டை அளவுள்ள, 1,078.80 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 10 வியாபாரிகள் பங்கேற்று, அதிகபட்சமாக,ஒரு கிலோரூ.228.60 க்கும் , குறைந்த பட்சமாக, ரூ.180 என, சராசரியாக, ரூ.215 க்கு ஏலம் எடுத்தனர். இதன் மதிப்பு, 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 452 ரூபாயாகும்.

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்த பொருளுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us