ADDED : ஆக 13, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, மீன் சந்தை, மலர் சந்தை மற் றும் தினசரி புது மார்க்கெட் கட்டடம் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். ஏதேனும் குறைகள் உள்ளதா; வேறு என்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
உதவி கமிஷனர்கள் கணேஷ்குமார், ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.