sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது:   ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்

/

சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது:   ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்

சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது:   ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்

சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது:   ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்


ADDED : நவ 09, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:நிப்ட் - டீ பிரீமியர் லீக், அப்துல்கலாம் நினைவு கோப்பையை சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி கைப்பற்றியது. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாமிடமும், குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணி மூன்றாமிடம் பெற்றது.அக்., மாதம் துவங்கி, இரண்டு மாதங்களாக, நிப்ட்- டீ கல்லுாரியில், அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான 'நிப்ட் டீ பிரிமீயர் லீக் - 7' கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய இப்போட்டியின், அரையிறுதி, நவ., முதல் வாரத்தில் நடந்தது.அரையிறுதி போட்டி முடிவில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி - சி.ஆர். கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று இறுதி போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஈஸ்ட்மேன் அணி, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி, 20 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 167 ரன் குவித்தது. வினீத், 55 ரன் எடுத்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பழநிமுருகன், 13 பந்துகளில், 35 ரன் எடுத்து, ரன் குவிப்புக்கு உதவினார்.

ஆட்டநாயகன்

பழநிமுருகன்

இலக்கை விரட்டிய ஈஸ்ட்மேன் அணி, 18 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 109 ரன் எடுத்தது. 58 ரன் வித்தியாசத்தில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பேட்டிங்கில் அசத்திய பழநிமுருகன், நான்கு ஓவர் வீசி, 18 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் ஆல்பர்ட், நான்கு ஓவரில், 21 ரன் கொடுத்து, நான்கு விக்கெட் வீழ்த்தினார்; ஆட்டநாயகன் விருது பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பழநிமுருகனுக்கு வழங்கப்பட்டது.மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. நிப்ட் டீ கல்லுாரி சேர்மன் கோவிந்தராஜ், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், கல்லுாரி நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், சி.ஆர்., கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன், டெக்னோ ஸ்போர்ட்ஸ் கிளப் உற்பத்தி பிரிவு தலைவர் லோகேஷ் ஆகியோர், வெற்றி பெற்ற அணிக்கு, 'நிப்ட் டீ பிரீமியர் லீக் - 7', அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பையை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.

குவாலியன்ஸ்

3ம் இடம்

மூன்றாம் இடம் பெறும் அணியை தேர்வு செய்வதற்கான போட்டி, குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் - விக்டஸ் டையிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்ற விக்டஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து, 14.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 79 ரன் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய, குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணி, 15.2 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 83 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் ஸ்ரீ ராம்அண்ணா தேர்வு செய்யப்பட்டார்.

----

3 அல்லது 4 காலம்

நிப்ட் - டீ பிரீமியர் லீக், அப்துல்கலாம் நினைவு கோப்பையை சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி கைப்பற்றியது. கோப்பையுடன் சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி வீரர்கள்.

தொடர் நாயகன் மகேந்திரமணி விக்டஸ் டையிங் அணி மகேந்திரமணி தொடர் நாயகன் விருது பெற்றார். சிறந்த பீல்டர் விருது வாசுதேவன் (எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ்), அதிக ரன் மற்றும் அதிக பவுண்டரி விருது சசி (விக்டஸ் டையிங்), அதிக சிக்சர் விருது அஜித்குமார் (ஈஸ்ட்மேன் அணி), அதிக விக்கெட் விருது ராம்பிரபு (எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ்) பெற்றனர்.








      Dinamalar
      Follow us