/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது
/
குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது
ADDED : செப் 05, 2025 11:43 PM

திருப்பூர்:
'ஆர்.டி.ஓ., - இசலான்' என்ற 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்தியை தொட்டதும், 2.10 லட்சம் ரூபாய் அபேஸ் ஆன விவரகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபூலுவபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 32; இவருக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலமாக, 'ஆர்.டி.ஓ., - இசலான்' என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை திறந்து பார்க்க தொட்டதும், அவர் வங்கி கணக்கில் இருந்த, 2.10 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் போரில், சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டனர். விசாரணையில், ராகுல் மந்தர் , 25 என்ற நபர் கையாடல் செய்ததை கண்டறிந்தனர். முறைகேடு செய்தவர், கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'இ-சலான்' செலுத்த வேண்டுமென, குறுஞ்செய்தி வந்தால் உடனே பதில் அளிக்க முயற்சிக்க வேண்டாம். உடனடியாக, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்; www.cybercrime.gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம். பொதுமக்கள், https://echallan.parivahan.gov.in என்ற முகவரி வாயிலாக வரும் தகவலை மட்டும் ஏற்கலாம். இதுபோன்ற மற்ற இணையதள முகவரி வாயிலாக வரும் தகவலை ஏற்க வேண்டாம்; மொபைல் போன் பயன்பாட்டில் கவனமாக இருக்கவும்,' என்றனர்.