/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீகருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 05, 2025 11:42 PM
திருப்பூர்:
திருப்பூர் போயம்பாளையம் பிரிவு, பழனிசாமி நகர் 4வது வீதியில், ஸ்ரீகருப்பராய சுவாமி, சப்தகன்னிமார், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா, நாளை ( 7ம் தேதி) நடக்கிறது.
கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, இன்று யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. கோபூஜை, மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. மாலையில் முதல்கால பூஜை நடக்கிறது. நாளை காலை, இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து, கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
காலை, 8:45 மணி முதல், 9:25 மணிக்குள், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீகருப்பராயசுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. மகா அபிேஷகம், அலங்காரபூஜையை தொடர்ந்து, ரா.ர., திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.