sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

/

 இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

 இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

 இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : நவ 14, 2025 09:18 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும், சீரமைக்கப்படாததால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

உடுமலை நகராட்சி யு.கே.சி., நகரில், நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி குடியிருப்புகளை சேர்ந்த, குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகில், தமிழக அரசின் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அருகில் இருந்த பள்ளி சுற்றுச்சுவர் ஒரு பக்கத்தில் இடிக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது வாகனங்கள் வந்து செல்லவும், கட்டுமான வாகனங்கள் செல்லவும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் இதுவரை கட்டப்படவில்லை.

இதனால், இரவு நேரங்களில், பள்ளி வளாகம் சமூக விரோத மையமாக மாற்றப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us