/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2025 08:36 PM

உடுமலை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடனே ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், பொதுப்போக்குவரத்தை பலப்படுத்தவும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்கவும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், 58 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, சி.ஐ.டி.யு., ஆட்டோ, மோட்டார், பஞ்சாலை உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.