sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதா?'

/

'வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதா?'

'வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதா?'

'வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதா?'


ADDED : ஆக 06, 2025 10:50 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; ''வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து வருகிறோம்'' என, பல்லடத்தில் நடந்த பனை விதைகள் நடும் விழாவில், முன்னாள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இளங்கோவன் கூறினார்.

பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள தாமரைக் குளத்தில், 8 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி, வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடந்தது. அதன் தலைவர் சுவாதி சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'இயற்கைக்கு மாறுங்கள்'இளைஞர்களுக்கு அழைப்பு பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் இளங்கோவன் பேசியதாவது:

தொழிற்சாலை மற்றும் நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை குளம், குட்டைகள், நீர்நிலைகளில் கலப்பது வேதனைக்குரியது. பல்வேறு நிகழ்வுகளின்போது, அதிகாரிகள் என்றும் பார்க்காமல், நம்மாழ்வார் அவர்களை திட்டுவார். ஆனால், மண் மற்றும் சூழலுக்காக மட்டுமே அவர் மற்றவர்களை திட்டினார் என்பது புரிகிறது. விவசாய தொழிலுக்கு பெரிதும் உதவும் 'பயோசார்', உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது உலகை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை நாமே அழித்து விடுவோம். தமிழகத்தில், மொத்தம், 350 நீர்நிலை பாதுகாப்பு குழுக்கள் உள்ளன. இது வரவேற்கத்தக்கது. கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை இயற்கைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பனை விதைகள் நடும் விழாவை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார், கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பொருளாளர் சுவாமி சஹானந்தா, அவிநாசி குளம் காக்கும் அமைப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். 'வனம்' அமைப்பின் இயக்குனர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us