/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.ஜி.பி., சுற்றறிக்கை வக்கீல் ஆர்ப்பாட்டம்
/
டி.ஜி.பி., சுற்றறிக்கை வக்கீல் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 24, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறை கைதிகளை வக்கீல்கள் சந்திப்பதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி திருப்பூரில், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு, அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் மணவாளன் தலைமை வகித்தார். பொருளாளர் உதயசூரியன் உள்பட பலர் பங்கேற்றனர். வக்கீல்கள் கூறுகையில், ''வக்கீல்களை கிரிமினல் போல் சித்தரிக்கும் டி.ஜி.பி., சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'' என்றனர்.