/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் ஏப்., 5, 6ல் 'தினமலர்' வழிகாட்டி உயர்கல்வியை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும்!
/
திருப்பூரில் ஏப்., 5, 6ல் 'தினமலர்' வழிகாட்டி உயர்கல்வியை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும்!
திருப்பூரில் ஏப்., 5, 6ல் 'தினமலர்' வழிகாட்டி உயர்கல்வியை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும்!
திருப்பூரில் ஏப்., 5, 6ல் 'தினமலர்' வழிகாட்டி உயர்கல்வியை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும்!
ADDED : மார் 29, 2025 11:23 PM

திருப்பூர்: பிளஸ் 2 முடித்த பின், உயர்கல்வியை தேர்வு செய்வது தொடர்பாக வழிகாட்டும், 'தினமலர்' வழிகாட்டி - கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி, திருப்பூரில், ஏப்., 5 மற்றும் 6 ம் தேதிகளில், திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கே.எம்.சி.எச்., மற்றும் டாக்டர் என்.ஜி.பி., கல்வி குழுமம், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா' ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் என்ன படித்தால் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கலாம் என்று, இந்நிகழ்ச்சி வாயிலாக தெளிவு பெறலாம். உயர்கல்விக்கு 'அப்ளிகேஷன்' வாங்குவது முதல் அட்மிஷன் வழி அனைத்து வழிகாட்டுதலையும் பெறலாம்.
திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், ஏப்., 5 மற்றும் 6 ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், காலை, 10:00 முதல், மாலை, 6:30 வரை, வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சியும் நடக்கின்றன. கோவை - திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 70 முன்னணி கல்வி நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கின்றன. வழிகாட்டி கருத்தரங்குகளில், 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். கருத்தரங்கில், புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்புகள், அரசு வேலை வாய்ப்பு மற்றும் 'நீட்' தேர்வுக்கான பிரத்யேக விளக்கம் அளிக்கப்படும்.
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், 'ஏஐ' தொழில்நுட்பம், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', 'ரோபாட்டிக்ஸ்', சட்டம், அறிவியல், கலை உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் பேசுகின்றனர். வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் துறைகள் குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி பயிலும் போதே, வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் அனுபவ பகிர்வுகளும் வழங்கப்படும். கண்காட்சியில், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட, 70 கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன.
புதிய உயர்கல்வியை தொடர வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் மாணவ, மாணவியரும், தங்கள் மகன் அல்லது மகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் பெற்றோரும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, தெளிவான வழிகாட்டுதலை பெறலாம்.