/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; மாணவரே... பெற்றோரே... 'மிஸ்' பண்ணாதீங்க!
/
'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; மாணவரே... பெற்றோரே... 'மிஸ்' பண்ணாதீங்க!
'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; மாணவரே... பெற்றோரே... 'மிஸ்' பண்ணாதீங்க!
'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; மாணவரே... பெற்றோரே... 'மிஸ்' பண்ணாதீங்க!
UPDATED : ஏப் 05, 2025 05:51 AM
ADDED : ஏப் 05, 2025 12:12 AM

திருப்பூர்; திருப்பூரில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியை தேர்வு செய்ய காத்திருக்கும் மாணவ, மாணவியருக்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவங்குகிறது; கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களின் பிரத்யேக அரங்குகளை பார்வையிட்டு, தங்கள் உயர்கல்வி குறித்த தேடலுக்கு விடை பெறலாம்.
பிளஸ் 2 முடித்து விட்டு, உயர்கல்வியை தேர்வு செய்ய காத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்ட, 'தினமலர்' நாளிதழ் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. கருத்தரங்கம் துவங்கியவுடன், பல்கலை, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களின் அரங்கங்கள் திறக்கப்படுகின்றன.
வழிகாட்டி நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த படிப்புக்கு எந்த வேலை கிடைக்கும், படிக்கும் போதே வேலை வாய்ப்பு திறன் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் அள்ளி வழங்கப்படுகிறது.
சந்தேகங்கள் தீரும்
வழிகாட்டி கருத்தரங்கில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்', 'ஆக்மென்டட் ரியாலிட்டி', 'சோஷியல் மீடியா', 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', 'பிக்டேட்டா', 'ரோபாட்டிக்ஸ்', சட்டம், அறிவியல், கலை உட்பட ஏராளமான படிப்புகள், அவற்றில் உள்ள வருங்கால வாய்ப்புகள் குறித்து கல்வியாளர்கள் கருத்தரங்குகளில் உரையாற்றி, மாணவ, மாணவியருக்கான சந்தேகங்களை தெளிவுபடுத்துகின்றனர். கருத்தரங்கில் புத்தம்புது படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், நீட் தேர்வு குறித்த பிரத்யேக விளக்கமும் அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கருத்தரங்கில் உயர்கல்வி ஆலோசனைகளை பெறுவதுடன், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களின் பிரத்யேக அரங்கங்களை பார்வையிட்டு, தங்களின் உயர்கல்விக்கான தேடல்களிலும், தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
70க்கும் மேற்பட்ட அரங்குகள்
மாணவ, மாணவியர் பெற்றோர் பார்வையிட, முன்னணி பல்கலை கழகங்கள் உட்பட, 70க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது; ஒரே கூரையின் கீழ் உயர்கல்விக்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வசதி மாணவ, மாணவியருக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.
வல்லுனர்கள் விளக்கம்
-------------------
கருத்தரங்கில், 'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில் நுட்பங்கள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு, 'நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது, டிப்ஸ்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின், 'வணிகம் மற்றும் கணக்கியல்' எனும் தலைப்பில், 'தி இன்ஸ்டியூட் ஆப் சார்டேட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் திருப்பூர் கிளை சேர்மன் தருண் ஆகியோர் பேச உள்ளனர்.
பெற்றோரும் பங்கேற்கலாம்
-----------------------
வழிகாட்டி நிகழ்ச்சி, கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்வில், மகன், மகளுடன் பெற்றோராகிய நீங்களும் பங்கேற்கலாம். கலை மற்றும் அறிவியல், இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், அவற்றின் வாயிலாக எதிர்காலத்தில் கிடைக்க பெறும் வேலை வாய்ப்பு, எந்த படிப்பு எங்கு படித்தால், உங்களின் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். கல்வியாளர்களிடம் உங்களது கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். கண்காட்சி இன்றும், நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெறும்.
அட்மிஷன் முதல் அப்ளிகேஷன் வரை
ஒரே கூரையின் கீழ் உயர்கல்விக்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வசதி மாணவ, மாணவியருக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்
இன்று
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், 'சி.ஏ., மற்றும் வணிகவியல்' எனும் தலைப்பில், 'தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் திருப்பூர் கிளை சேர்மன் தருண், வெளிநாட்டு படிப்பு, வேலைவாய்ப்பு எனும் தலைப்பில், தீபாஸ்ரீனிவாசன், 'கோர் இன்ஜினியரிங்' எனும் தலைப்பில் எஸ்.என்.ஆர்., கல்லுாரி டாக்டர் சவுந்தர்ராஜன், 'அறிவியல் துறையில் காத்திருக்கும் வாய்ப்புகள்' எனும் தலைப்பில், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூசன்ஸ் டாக்டர் ஜெகஜீவன், 'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில் நுட்பங்கள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி ஆகியோர் இன்று (5ம் தேதி) பேச உள்ளனர்.
நாளை
'மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனெஜ்மென்ட் படிப்புகள்' குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி சுரேஷ்குமார், 'உயர்கல்வி வாய்ப்புகள்' எனும் தலைப்பில், மாநில திட்டக்குழு கமிஷன், ஐ.எப்.எஸ்., அதிகாரி சுதா, 'கலைப்பிரிவில் உள்ள வாய்ப்பு' எனும் தலைப்பில் எஸ்.என்.ஆர்., கல்லுாரி ஜெயபால், 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு, 'நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது, டிப்ஸ்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் நாளை (6ம் தேதி) உரையாற்றுகின்றனர்.

