sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

/

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு


ADDED : செப் 29, 2011 10:04 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை; கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது,' என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கவனத்தில் கொண்டு, ஓர் அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆதரிக்கிறது.

உள்ளாட்சி அமைப்பு என்பது உள்ளூர் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இத்தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு என பொதுவான கோரிக்கைகளை வைக்க முடியாது என்பதால், உள்ளாட்சி தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு, இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் உறுப்பினர்கள்,தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு ஓட்டு அளிக்கலாம். எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கொடியையோ, பெயரையோ எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம். மாவட்ட கிளை நிர்வாகிகள், எந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம், என்று தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us