/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்
ADDED : அக் 21, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
உடுமலையில், தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளிக்கான புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகத்தலைவர் லீலா, செயலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் வழங்கப்பட்டன.