/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கோ - கோ போட்டி; மாணவர் அணி உற்சாகம்
/
மாவட்ட கோ - கோ போட்டி; மாணவர் அணி உற்சாகம்
ADDED : நவ 08, 2025 12:59 AM

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட கோ கோ போட்டி, அணைப்புதுார், ஏ.கே.ஆர். அகடாமி பள்ளியில் நேற்று நடந்தது.
போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளி முதல்வர் கணேசன் போட்டிகளை துவக்கி வைத்தனர். காங்கயம் கார்மல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.
மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த, 252 வீரர்கள் பங்கேற்றனர். பதிநான்கு வயது, இறுதி போட்டியில், தாராபுரம், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி அணி - காங்கயம், சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணிகள் மோதின. 20 - 15 என்ற புள்ளிக்கணக்கில், தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.
பதினேறு வயது பிரிவு, இறுதி போட்டியில், பாண்டியன்நகர் சாரதா வித்யாலயா பள்ளி அணி - காங்கயம், ஸ்ரீ ராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி அணி மோதின. 17 - 12 என்ற புள்ளிக்கணக்கில் சாரதா வித்யாலயா பள்ளி அணி வென்றது. 19 வயது பிரிவு, இறுதி போட்டியில், தாராபுரம், குள்ளம்பாளைம், சாந்தி நிகேதன்பள்ளி அணி, 11 - 10 என்ற புள்ளிக்கணக்கில், அவிநாசி, எம்.எஸ்., வித்யாலயா பள்ளி அணியை வென்றது.

