/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவிலான கைப்பந்து; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
/
மாவட்ட அளவிலான கைப்பந்து; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
மாவட்ட அளவிலான கைப்பந்து; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
மாவட்ட அளவிலான கைப்பந்து; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : செப் 30, 2024 11:20 PM

உடுமலை ; முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் விஜயன், கார்த்திகேயன் மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.