sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொட்டிக்குள் போஸ்ட் ஆபீஸ் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு!

/

தொட்டிக்குள் போஸ்ட் ஆபீஸ் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு!

தொட்டிக்குள் போஸ்ட் ஆபீஸ் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு!

தொட்டிக்குள் போஸ்ட் ஆபீஸ் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு!


ADDED : ஜன 29, 2025 03:52 AM

Google News

ADDED : ஜன 29, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; நீர்த்தேக்கத் தொட்டிக்குள் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீசை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, கள்ளிப்பாளையம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல்லடத்தை அடுத்த, வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில், 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில், இப்பகுதியில், போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருவது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், 'மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் அரை ஏற்படுத்தப்பட்டு, அதில்தான் நீண்ட காலமாக போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. நீர்த்தேக்கத் தொட்டியின் மேல்பகுதியில் ஆலமரம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. மேலும், போஸ்ட் ஆபீஸ் உள்ள அறையின் நுழைவு வாயிலுக்கு மேற்புறம் உள்ள சிமெண்ட் சிலாப் சேதமடைந்து, தலையில் விழ காத்திருக்கிறது. தபால், சேமிப்பு கணக்கு, மணியாடர் என, பல்வேறு பணிகளுக்காகவும் பொதுமக்கள் வந்து செல்லும் இடம் என்பதால், விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, போஸ்ட் ஆபீசை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us