sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிதிலமடைந்த தொட்டியை பராமரிக்க எதிர்பார்ப்பு

/

சிதிலமடைந்த தொட்டியை பராமரிக்க எதிர்பார்ப்பு

சிதிலமடைந்த தொட்டியை பராமரிக்க எதிர்பார்ப்பு

சிதிலமடைந்த தொட்டியை பராமரிக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 10, 2025 08:09 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பாலப்பம்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்டது பாலப்பம்பட்டி கிராமம். திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகத்துக்கான மேல்நிலை நீர்தேக்க தொட்டி பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பின்புறம் உள்ளது.

இந்த தொட்டியின் கட்டமைப்பு சிதிலமடைந்து, பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலேயே கிராம நிர்வாக அலுவலகமும் உள்ளது. பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும், பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது.

இதனால் விபத்து ஏற்படும் முன்பு, சிதிலமடைந்துள்ள நீர் தேக்க தொட்டியின் கட்டமைப்பை பராமரிப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us