sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடுமலை - மூணாறு ரோட்டில் 'பாஸ்ட் டிராக்' முறை அமல்

/

உடுமலை - மூணாறு ரோட்டில் 'பாஸ்ட் டிராக்' முறை அமல்

உடுமலை - மூணாறு ரோட்டில் 'பாஸ்ட் டிராக்' முறை அமல்

உடுமலை - மூணாறு ரோட்டில் 'பாஸ்ட் டிராக்' முறை அமல்


ADDED : ஏப் 14, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில் இருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோடு, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்களுக்கு, ரூ.20, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ரூ.50 மற்றும் கனரக வாகனங்களுக்கு, ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதுவரை, வனத்துறை ஊழியர்களால் நேரடியாக வசூலிக்கப்பட்டு, ரசீது வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, சுங்க கட்டணங்கள் வசூலிக்கும் முறையாக 'பாஸ்ட் டிராக்' முறையில், வனத்துறை சோதனை சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வனத்துறை ஊழியர்கள் பணி குறைவதோடு, முறைகேடுகளை தடுக்க முடியும்.

இத்தொகை, ஆனைமலை புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்தொகை வாயிலாக, வனம், மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us