/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றிய அலுவலகம் முன் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஒன்றிய அலுவலகம் முன் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2025 11:27 PM

உடுமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், துாய்மைக்காவலர்களின் மாத ஊதியத்தை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஊராட்சி வாயிலாக வழங்க வேண்டும்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது, காலமுறை ஊதியமாக நிர்ணயித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.