sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெண்டை அறுவடை துவக்கம்; கிடைக்கிறது நிலையான விலை

/

வெண்டை அறுவடை துவக்கம்; கிடைக்கிறது நிலையான விலை

வெண்டை அறுவடை துவக்கம்; கிடைக்கிறது நிலையான விலை

வெண்டை அறுவடை துவக்கம்; கிடைக்கிறது நிலையான விலை


ADDED : ஏப் 10, 2025 11:11 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; வெண்டை காய்க்கு சந்தையில் நிலையான விலை கிடைத்து வருகிறது; விசேஷ நாட்களில், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உடுமலை கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனத்துக்கு, சீசனை திட்டமிட்டு, இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

மேலும் தற்போது வெண்டை அறுவடை துவங்கியுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெண்டைக்காய் உட்பட பல்வேறு காய்கறிகளை உழவர்சந்தை, சந்தைக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, உடுமலை உழவர் சந்தையில், வெண்டை காய்கிலோ, 35-40 ரூபாய் வரை விலை கிடைத்தது.

விவசாயிகள் கூறுகையில், 'பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில், வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். நடப்பு சீசனில் சாகுபடி பரப்பு குறைவாக உள்ளதால், அறுவடை துவங்கியதும் நல்ல விலை கிடைத்து வருகிறது.

ஏக்கருக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us