/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்கள்
/
மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்கள்
மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்கள்
மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்கள்
ADDED : மே 24, 2025 12:40 AM

திருப்பூர் : தாங்கள் படித்த மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முன்னாள் மாணவர் அக்கறை எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், பள்ளிக்கு அட்மிஷன் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் சிறப்பு அம்சங்கள், பள்ளியில் உள்ள வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி பிளக்ஸ் பிரின்ட் செய்யப்பட்டு, நகரின் முக்கிய சந்திப்புகளில் பார்வைக்கு முன்னாள் மாணவர்களால் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க இணை செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:மாநகரில், 12 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுரடி கட்டடத்துடன் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அமைந்துள்ளது. சிறந்த விளையாட்டு மைதானம், என்.சி.சி., மாணவர் படை, அழகிய வகுப்பறை, கணிணி ஆய்வகம், அடல்டிங்கரிங் ஆய்வகம், பிரமாண்ட நுாலகம் உள்ளிட்ட வசதிகள் பள்ளியில் உள்ளது.
பள்ளிக்கு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியை கையில் எடுத்து, பள்ளியில் இருந்து ஐந்து கி.மீ., துாரத்துக்கு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய பிளக்ஸ் பலகையை ஆங்காங்கே பெற்றோர், பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். மாநகராட்சி பள்ளியில் மாணவர் இணைய வரவேற்கப்படுகிறார்கள். அட்மிஷன் விபரங்களுக்கு 96775 33330, 79045 07608, 75986 74706 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

